சேலம்: சிகிச்சை பலனின்றி ஆண் யானை உயிரிழப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பெரிய தண்டாவில், உயிருக்கு போராடிய 6 வயது ஆண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.

Update: 2020-06-28 04:13 GMT
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பெரிய தண்டாவில், உயிருக்கு போராடிய 6 வயது ஆண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. முன்னதாக உடல் மெலிந்த நிலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து, நோய் தொற்று காரணமாக, ஆபத்தான நிலையில் பச்சை பாலி ஓடையில் கிடந்த யானைக்கு, கால்நடை மருத்துவ துறையினர் சிகிச்சை அளித்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, அதே இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்