ஆம்புலன்ஸ் 4 மணி நேரம் தாமதம்- பிறந்த குழந்தை பலியான சோகம்

சென்னை ஆவடி அருகே பிரசவத்திற்காக அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2020-06-28 04:09 GMT
சென்னை ஆவடி அருகே பிரசவத்திற்காக அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருநின்றவூர் அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டதில் குழந்தை உயிரிழந்தது. ஆம்புலன்ஸ் கால தாமதமாக வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்