சவுடுமண் குவாரியை மூடக்கோரி போராட்டம் - அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாக குற்றச்சாட்டு

சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் சவுடுமண் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-27 10:21 GMT
சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் சவுடுமண் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது, குவாரிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்