"தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-25 11:38 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த  48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  கடலூர்,  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர், சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்