கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

மதுரை சோழவந்தான் வைகையாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

Update: 2020-06-22 03:52 GMT
மதுரை சோழவந்தான் வைகையாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார். வைத்தியநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான ஆகாஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத ஆகாஷ் வெகு நேரமாகியும் கரை திரும்பாததால் இது குறித்து சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் ஆகாசின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்