முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதம் - மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு வரும் 18 ஆம் தேதி முதல் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

Update: 2020-05-16 02:49 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு வரும் 18 ஆம் தேதி முதல் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார். மேலும் நாளை வரை, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். 18 ஆம் தேதிக்கு பின்னர் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்