உணவின்றி தவிக்கும் குரங்குகள் - வனத்துறையினர் உணவளிக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அரசங்கண்ணி பகுதிகளில் அதிகளவு குரங்குகள் உள்ளது.

Update: 2020-04-02 13:58 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அரசங்கண்ணி பகுதிகளில் அதிகளவு குரங்குகள் உள்ளது. இவைகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவளித்து வந்தனர். ஆனால் தற்போது கொரானா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை அமுலில் உள்ளது. இதனால் காட்டு குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன.  இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்  குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்நிலையில் குரங்குகளுக்கும் வனத்துறையினர் உணவளிக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்