"தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-30 08:46 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைமச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்