"திருக்குறளை சொன்னால் விட்டு விடுகிறோம்" - ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்த போலீசார்
நெல்லையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களில் வருவோருக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.;
நெல்லையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களில் வருவோருக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் பிடிபட்டவர்கள் திருக்குறளில் ஒன்றைக் கூறினால் விட்டு விடுவதாக கூறிய போலீசார், வாகனங்களில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பினர். இதில் சிலர் திருக்குறளை சொல்லி விட்டு சென்ற நிலையில் திருக்குறள் சொல்ல தெரியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.