"தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி" - வேளாண் கருத்தரங்கில் அமைச்சர் அன்பழகன் தகவல்

நடப்பாண்டு தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-08 19:22 GMT
நடப்பாண்டு தமிழகத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற சிறுதானிய கருத்தரங்கு மற்றும் விதை திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் அன்பழகன், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டதாக கூறினார். அண்மை காலமாக மக்களின் உணவு பழக்கம் மாறி வருவதாகவும், அரிசியை தவிர்த்து பலர் சிறுதானிய உணவை விரும்புவதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்