சாலையோரம் நடந்து சென்ற கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவு - தென்காசி அருகே இளைஞரை கைது செய்த போலீசார்

தென்காசி அருகே கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-02 10:38 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். 23 வயதான இவர், சாலையில் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும்  பொதுமக்களை செல்போனில் படம் பிடித்து அதனை தனது டிக் டாக்கில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பல முறை புகார் வந்த நிலையில் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்