அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை எதிர்த்து 2 பேர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டனையை எதிர்த்து 2 பேர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது குறித்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-24 13:44 GMT
சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 9 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஏற்கனவே உமாபதி என்பவர் மேல்முறையீடு செய்த நிலையில் தற்போது லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரம் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் கோரியுள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்