அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Update: 2020-02-18 11:18 GMT
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்தும், சிஏஏ தொடர்பாகவும் தவறான கருத்துக்களை கூறியதாக ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, வரும் 24 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்