பனங்காடியில் மதுபான கடை திறக்க இடைக்கால தடை - வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு

மதுரை மாவட்டம் ஐயர்பங்களா - பனங்காடி பகுதியில் மதுபான கடையை திறக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2020-02-17 11:43 GMT
மதுரை மாவட்டம் ஐயர்பங்களா - பனங்காடி பகுதியில் மதுபான கடையை திறக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் பள்ளி அருகே மதுபான கடையை திறந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தொடரப்பட்டிருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மண்டல டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க கோரி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்