வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கியவர் கைது

சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்க ரமேஷ் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக நகர அமைப்பு ஆய்வாளர் காமத்துரை என்பவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-07 20:50 GMT
சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்க ரமேஷ் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக நகர அமைப்பு ஆய்வாளர் காமத்துரை என்பவர் கைது செய்யப்பட்டார். ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாயை முன்பணமாக ரமேஷிடம் பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் காமத்துரையை கைது செய்தனர். அவரை ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சில முக்கிய  ஆவணங்களையும் காமத்துரையிடமிருந்து கைப்பற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்