மாணவர்கள் போராட தடை கோரி வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மாணவர்கள் போராட தடை விதிக்கக் கோரி வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-03 08:57 GMT
கல்வி நிறுவன வளாகங்கள், பொது இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்த தடை கோரி சென்னை சேர்ந்த வராகி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் கட்சியினரால் மூளைச் சலவை செய்யப்பட்டு போராட்டத்தில் குதிக்கும் மாணவர்களால், மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பு மார்ச் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்