குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்

Update: 2020-02-02 15:48 GMT
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சியினர் சார்பாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி, உக்கடம் பகுதியில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். இதை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்