"அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-01-20 05:33 GMT
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர்  பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அ.தி.மு.க நிர்வாகிகள் தங்களால் முயன்ற நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்