ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உத்தரவு - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-13 08:51 GMT
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த பலர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆதி திராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது, தலைவர் பாரபட்சமாக செயல்படுகிறார் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற மாவட்ட தலைமை நீதிபதி மாணிக்கம் தலைமையில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவினர் விழாவை நடத்த உத்தரவிட்டனர். இதே போல பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்