திருச்சி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2020-01-08 13:08 GMT
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, லாபகரமான விலை வழங்கிட வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் தொடர்ந்து 7வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, வாழைப்பழத்தை வாயில் வைத்து சங்கலியால் கை கால்களை கட்டி வைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்