சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவி பதவியேற்க தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-04 10:44 GMT
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சங்கராபுரம் பஞ்சாயத்தில் முதலில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இந்த சம்பவத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தேவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்