அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் வெற்றி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார்.

Update: 2020-01-04 06:31 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக அந்த ஊராட்சியில், திமுகவினரே ஊராட்சி தலைவராக இருந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கத்தின் தம்பியும், எதிர்வேட்பாளராக இளையராஜாவும் களமிறங்கியுள்ளனர். இதில், இளையராஜா வென்றதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதிமுக வேட்பாளர் வென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்