தி.மு.க. பேச்சாளர் திருவுருவ படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி
மதுரையில் திமுக தலைமை கழக பேச்சாளர் சலீம் திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மதுரையில் திமுக தலைமை கழக பேச்சாளர் சலீம் திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த சலீம், அண்மையில் உடல் நலக்குறைவால், உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சலீம் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின், அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சலீம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின், 5 லட்ச ரூபாய் காசோலையை நிதி உதவி வழங்கினர்