போக்குவரத்து ஊழியர்களுக்கு விடுப்பு இல்லை - முன்னர் அளிக்கப்பட்ட விடுப்பும் வார விடுமுறையும் ரத்து

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, நாளை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.

Update: 2019-12-22 04:37 GMT
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் நாளை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் எவருக்கும் விடுமுறை தர இயலாது என அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்