இலவச வீடு கட்டி தருவதாக மோசடி - பாதிரியாருக்கு 4 ஆண்டுகள் சிறை

இலவச வீடு கட்டி தருவதாக மோசடி செய்த பாதிரியாருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் 16 லட்சம் அபராதம் விதித்து குடியாத்தம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

Update: 2019-12-19 02:39 GMT
இலவச வீடு கட்டி தருவதாக மோசடி செய்த அரியூர் பகுதியை சேர்ந்த யோபுசரவணன் என்ற பாதிரியாருக்கு 4 ஆண்டுகள் சிறை  மற்றும் 16 லட்சம் அபராதம் விதித்து கடந்த மாதம் குடியாத்தம்  நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதனை தொடர்ந்து பாதிரியார் யோபு சரவணன் குடியாத்தம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். குடியாத்தம் மாஜிஸ்ட்ரேட் செல்லபாண்டியன்  உத்தரவின் பேரில் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்