"2011 படி இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை செய்யவில்லை" - நீதிமன்ற உத்தரவுகளை மீறிவிட்டதாக திமுக குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவில்லை என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-12-16 12:10 GMT
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவில்லை என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில்,  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி,  நீதிமன்ற உத்தரவுகளை மீறிவிட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை என்றும் திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்