நித்யானந்தா மீது பண மோசடி புகார் - பிரான்ஸ் போலீஸ் வழக்குப் பதிவு

பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உத்தரவின் பேரில் நித்யானந்தா மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-12-06 05:00 GMT
பிரான்ஸ்சை சேர்ந்த ஒருவரிடம் மோசடி செய்து 4 லட்சம் அமெரிக்க டாலர் பெற்றுள்ளதாக பிரான்ஸ் போலீசாருக்கு வந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த, அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக பிரான்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து புகார்தாரர் அளித்த தகவல்களின் அடிப்படையில் நித்யானந்தாவின் வங்கி கணக்கு குறித்த விவரங்களைப் பெற முடிவு செய்துள்ளனர். இதற்காக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் உதவியை நாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்