சென்னை : கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னையில், கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-04 09:31 GMT
சென்னையில், கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 1999-ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில், நடந்து சென்ற பெண்களை, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், ஆரோக்கியதாஸ், ராமலிங்கம் ஆகியோர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மணிகண்டன் என்பவரை, மூவரும் வெட்டியதால் அவர் பலத்த காயம் அடைந்தார். இந்த வழக்கில் மூன்று பேரும் ஜாமீனில் வந்த நிலையில், விஜயகுமாரும், ஆரோக்கியதாசும் உயிரிழந்தனர்.  ராமலிங்கம் தலைமறைவானார். இந்த நிலையில் பள்ளிக்கரணையில் வாடகைக்கு வீடு எடுத்து அவர் வசித்து வந்ததை அறிந்த போலீசார், 20 ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சென்று கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்