திருச்செந்தூர்: மழையால் இடிந்து விழுந்த களிமண் வீடு

கனமழை காரணமாக திருச்செந்தூர் அருகே தோப்பூரில் சந்தனக்குமார் என்பவரின் களிமண் வீடு இடிந்து விழுந்தது.

Update: 2019-12-02 01:57 GMT
கனமழை காரணமாக திருச்செந்தூர் அருகே தோப்பூரில் சந்தனக்குமார் என்பவரின் களிமண் வீடு இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் வீட்டிற்குள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பாத்திரங்கள் சேதமாகி உள்ளன. தகவலறிந்து வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் இடிந்த வீட்டை பார்வையிட்டு சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்