செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 167 அதிகாரிகள் நியமனம்

புதியதாக உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருவாய்த்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட 167 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2019-11-22 09:09 GMT
புதியதாக உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருவாய்த்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட 167 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நவம்பர் 29 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உதயமாகவுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதனையொட்டி,  புதிய மாவட்டத்திற்கான மாவட்ட வருவாய் அலுவலர் , நேர்முக உதவியாளர்கள், சப்-கலெக்டர் , 6 தாசில்தார்கள், 15 துணை தாசில்தாரர்கள் உட்பட 167 பணியிடங்களை தோற்றுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வண்டலூர் தாலுகாவிற்கு 43 பணியிடங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தாலுகாவாக உள்ள குன்றத்தூருக்கு 51 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்