58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி : கும்பக்கரை அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

கும்பக்கரை அருவியில் 58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-20 07:44 GMT
கும்பக்கரை அருவியில் 58 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த செப்டம்பர் 23 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந‌த‌து. இந்த நிலையில், அருவியில் நீர் வரத்து சீரானதால், சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அருவியில் சுற்றுலாபயணிகளும் ,குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்