கஞ்சா பதுக்கிய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை : ரூ.1 லட்சம் அபராதம்
தூத்துக்குடியில் 466 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.;
தூத்துக்குடியில் 466 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வில்சன் கேப்ரியல் என்பவரின், ஏற்றுமதி நிறுவனத்தில், கடந்த ஆண்டு கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில், மதுரை மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.