சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய யானை : ஆதிவாசி பெண் உயிரிழப்பு
கொடைக்கானல் கீழ்மலைபகுதியில் சாலையில் நடந்து சென்றவர்களை காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கொடைக்கானல் கீழ்மலைபகுதியில் சாலையில் நடந்து சென்றவர்களை காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், கவுச்சிக்கொம்பு - நடுப்பட்டி வலவு இடையே நிகழ்ந்தது.