தொடர்ந்து மதம் மாறி திருமணம் செய்த மென்பொறியாளர் கைது

முஸ்லிம், கிறிஸ்தவம் என மதம் மாறி அடுத்தடுத்து திருமணம் செய்த பொறியாளரை, நாகர்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Update: 2019-11-02 09:11 GMT
முஸ்லிம், கிறிஸ்தவம் என மதம் மாறி அடுத்தடுத்து திருமணம் செய்த பொறியாளரை, நாகர்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த மென்பொறியாளர் தங்கபொன்சன் 2010 ஆம் ஆண்டு மும்பையில் வேலை பார்த்தபோது, விதவை பெண்ணான பாத்திமாவை காதல் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், வரதட்சணை கேட்டு பாத்திமாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, சொந்த ஊர் வந்த தங்கபொன்சன், இஸ்லாம் மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதோடு, அதே பகுதியை சேர்ந்த சகீலா என்ற கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த முதல் மனைவி பாத்திமா, மும்பையில் இருந்து குமரிக்கு வந்து கணவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அவரை மாமியார், கணவர் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாத்திமா அளித்த புகாரின் பேரில், தங்கபொன்சன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 





Tags:    

மேலும் செய்திகள்