முசிறியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் : சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதி

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-10-25 11:38 GMT
திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கவும், கிராம சேவை செய்த அரசு மருத்துவர்களுக்கு, பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடவும் கோரிக்கை விடுத்தனர். மருத்துவர்கள்  போராட்டம் காரணமாக, சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்