காதலனுடன் இளம்பெண் காவல்நிலையத்தில் தஞ்சம்

சென்னை அடுத்த மாதவரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2019-10-17 08:49 GMT
மாதவரத்தை சேர்ந்த மகேஷ் என்பவரின் மகள், மோனிகா, திருமணத்திற்கு முந்தைய நாளில் மாயமானார். எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மாயமான மணப்பெண் மோனிகா, காதலன் கார்த்திக்குடன் மாதவரம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெற்றோர் எதிர்ப்பின் காரணமாக, தப்பி ஓடி காதல் திருமணம் செய்து கொண்டதாக அந்த ஜோடி தெரிவித்தது. இருவரும் மேஜர் என்பதால், போலீசார் இரு வீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்