தீபாவளி பண்டிகை : பட்டாசு விற்பனை இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று தொடங்குகிறது.

Update: 2019-10-17 07:17 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று தொடங்குகிறது. இன்று மாலை முதல் வருகிற 29ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது. மழை பாதிக்காத வகையில் இரும்பு தகடுகளால் 65 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடும் கட்டுபாடுகள் காரணமாக  இந்தாண்டு பெரிய அளவில் புதிய பட்டாசுகள் வருகையில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேரக்கட்டுபாடு காரணமாக இந்த பட்டாசு விற்பனை குறைவாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்