"தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" - மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-10-14 05:18 GMT
தமிழகத்தில்  மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மனிதநேய ஜனநாயக சார்பில் சென்னை மெரினாவில் நடைபெற்ற துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மது எதிர்ப்பு பரப்புரை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்