மதுரை ஈஸ்வரமுடையார் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு

மதுரை அருகே மதுரோதய ஈஸ்வரமுடையார் கோவிலில் இருந்த இரண்டு ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

Update: 2019-10-13 09:03 GMT
மதுரை அருகே மதுரோதய ஈஸ்வரமுடையார் கோவிலில் இருந்த இரண்டு  ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். வாடிப்பட்டியை அடுத்த  கோவில்பட்டியில் உள்ளது ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரமுடையார் கோவில். அந்த கோயிலுக்குள், நேற்று இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள்,  இரண்டு சிலைகளை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரைத்தொடர்ந்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்