நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் : "உடனடி நடவடிக்கை தேவை" - வாசன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-09-26 12:14 GMT
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம், மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். மேலும், முதுகலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை உள்ளிட்ட விருப்பப் பாடங்கள் சேர்க்கும் விஷயத்தில் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்