நீட் தேர்வில் மேலும் 4 பேர் ஆள் மாறாட்டம்... ஸ்டாலின் விமர்சனம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-19 14:38 GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மேலும் நான்கு பேர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மருத்துவக் கல்லூரியிலும், மாணவர் சேர்க்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, தமது டுவிட்டர் பக்கத்தில், +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித் சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்