கோகுல்ராஜ் கொலை வழக்கு விவகாரம் - 14 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 14 பேரும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2019-09-19 03:28 GMT
வேறு சமூகப் பெண்ணை காதலித்த விவகாரத்தில், பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ், கடந்த 2015 ஆம் ஆண்டு கொலையானார். இந்த விவகாரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் மாவட்ட நீதிமன்றத்தில் மறு விசாரணை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசாரணைக்காக திருச்சி சிறையில் இருந்து யுவராஜ் உள்பட மொத்தம் 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே, வழக்கின் விசாரணையை நாமக்கல்லுக்கு வெளியே நடத்தக்கோரி, கோகுல்ராஜின் தாய் மனு அளித்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பத்மநாபன், வரும் 27-ஆம் தேதிக்கு வழக்கை மாற்றி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்