கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-17 06:28 GMT
கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசினார். முதலமைச்சரின் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அதிமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல என்றும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்