"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2019-09-16 20:03 GMT
சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். மேலும், சேலம் மாவட்டத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்திட போர்க்கால நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்