30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலாத்தாள் பாட்டி : கோவை ஆட்சியர் நேரில் பாராட்டு

கோவை மாவட்டத்தில் கடந்த 30 வருடங்களாக, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும், மூதாட்டி கமலாத்தாளை, மாவட்ட ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Update: 2019-09-10 21:54 GMT
கோவை வடிவேலம்பாளையத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி கமலாத்தாள், கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியில் ஒரு ரூபாய்க்கு, இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது சுவையான இட்லியை வாங்கிச்செல்ல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 

விலைவாசி உயர்ந்த போதிலும் கட்டணத்தை உயர்த்தாமல் தொடர்ந்து இதே விலைக்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, அவரது பேரன் புருசோத்தமன் என்பவர் உதவியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஆட்சியர் ராசாமணி,  தனது அலுவலகத்திற்கு கமலாத்தாள் பாட்டியை வரவழைத்து நேரில் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு புதிய வீடு கட்டித்தரவும், தேவையான உதவிகளை வழங்கவும் தான் தயாராக உள்ளதாக, அவர் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்