"கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-09-10 01:56 GMT
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்