தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்

தையல் ,ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட கோரி, தேர்வு எழுதியவர்கள் டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-09-09 10:50 GMT
தையல் ,ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட கோரி, தேர்வு எழுதியவர்கள் டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளி கல்வித்துறையில், ஓவியம், தையல், உடற்கல்வி, இசை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆயிர்தது 300 ஆசிரியர்களை நியமனம் செய்ய, கடந்த 2017 ல் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றவர்களில், இசை பிரிவிற்கான தேர்வுப்பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மற்ற 3 பிரிவினருக்கான தேர்வுப்பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வெழுதியவர்கள் , சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தேர்வு பட்டியலை உடனடியாக வெளியிட்டு, பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்