கோழி கொண்டை பூ விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை
உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கோழி கொண்டை பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கோழி கொண்டை பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஓமலூரை அடுத்த, சின்னத்திருப்பதி, பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு கட்டு கோழிக்கொண்டை பூ, 10 ரூபாய்க்கே விலை போவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.