சேலத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி

உலக பிசியோதெரபி தினமான இன்று, சேலத்தில் மருந்தில்லா மருத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Update: 2019-09-08 11:43 GMT
உலக பிசியோதெரபி தினமான இன்று, சேலத்தில் மருந்தில்லா மருத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில், இயன்முறை துறை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் மருந்தில்லா மருத்துவத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்தப் பேரணி, திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்