மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் - 2 ஆசிரியர்களை கைது செய்தது போலீஸ்

மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததால், தலைமை ஆசிரியை உள்பட இரண்டு ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-09-06 08:34 GMT
ராமநாதபுரம் மாவட்டம்  கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் ஆசிரியை அபிலாஷா பாடம் நடத்திக் கொண்டடிருந்தபோது, பள்ளியின் மின் மோட்டார் இயக்க 8 ஆம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரனை அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர் தமிழரசு கூறியதால், ஆசிரியை அபிலாஷா மாணவரை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோட்டார் சுவிட்சை மாணவன் கார்த்தீஸ்வரன் தொட்ட போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

ஆசிரியர்களின் அலட்சியப் போக்கே, மாணவ​னின் உயிரிழப்புக்கு காரணம் என மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக டி.எஸ்.பி. மகேஷ், மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி, உச்சிப்புளி ஆய்வாளர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், 2 ஆசிரியர்களையும் , மாவட்ட கல்வி அலுவலர் அய்யணன் நேற்று முன்தினம் மாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே, மாணவர் உடலை வாங்க மறுத்தது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, 2 ஆசிரியர்களையும் நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்